என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் கொண்டாட்டம்
- இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி உருவப்படத்திற்கு தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயந்தி தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
- 50-க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு இரட்டைமலை சீனிவாசன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தருமபுரி,
தருமபுரி மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு வைக்கப்பட்ட இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி உருவப்படத்திற்கு தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயந்தி தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு மண்டல செயலாளர் நந்தன், தருமபுரி சட்டமன்ற தொகுதி செயலாளர் சக்தி (எ) சமத்துவன், செய்தி தொடர்பாளர் பாண்டியன் மாவட்ட பொருளாளர் மன்னன், கப்பல் செந்தில் அம்பேத்வளவன், விசிக முப்பதாவது வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமி உமா சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
50-க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு இரட்டைமலை சீனிவாசன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாநில மாவட்ட ஒன்றிய அணி பொறுப்பாளர்கள் மற்றும் முகாம் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.






