search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைரோடு அருகே பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டிட பூமி பூஜை
    X

    சாண்டலார் புரத்தில் புதிய கட்டிடம் கட்ட பூமிபூஜை நடைபெற்றது.

    கொடைரோடு அருகே பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டிட பூமி பூஜை

    • பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு கூடுதலாக புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு ரூ.18 லட்சத்து 14 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
    • புதிய கட்டிடம் கட்ட பூமிபூஜை விழா நடைபெற்றது.

    கொடைரோடு:

    கொடைரோடு அருகே குல்லலக்குண்டு ஊராட்சியில் உள்ள சாண்டலார்புரம் அரிஜன பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு கூடுதலாக புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு ரூ.18 லட்சத்து 14 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    அதனை தொடர்ந்து புதிய கட்டிடம் கட்ட பூமிபூஜை விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு குல்லலக்குண்டு ஊராட்சி மன்றத் தலைவர் யசோதை தலைமை தாங்கினார். பால் கூட்டுறவு சங்கத் தலைவர்முருகன் வரவேற்றார்.

    முன்னாள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பஞ்சவர்ணம், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாத்துரை, குல்லலக்குண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் குணசேகரன் தி.மு.க.பிரமுகர் பெரியசாமி பால் கூட்டுறவு சங்க துணை தலைவர் நாகேஸ் என்ற பிச்சை மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×