search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒட்டன்சத்திரம் பகுதியில் வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு பூமிபூஜை
    X

    பூமி பூஜை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது.

    ஒட்டன்சத்திரம் பகுதியில் வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு பூமிபூஜை

    • ஒட்டன்சத்திரம் பகுதியில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டார்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே ஜவ்வாதுபட்டி, இடையகோட்டை, புலியூர்நத்தம், மார்க்கம்பட்டி, எல்லப்பட்டி, சிந்தலப்பட்டி, சின்னக்கம்பட்டி, கேதையுறும்பு, அம்பிளிக்கை,மண்டவாடி ஆகிய ஊராட்சிகளில் சிமெண்ட் சாலை அமைத்தல், புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு, புதிய ரேசன் கடை கடை திறப்பு,

    கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல்,மெட்டல் சாலை அமைத்தல், தடுப்பணைகள் அமைத்தல் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அடிக்கல் நாட்டுதல், பேவர்பிளாக் அமைத்தல், உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு மற்றும் பூமிபூஜை நடைபெற்றது.

    இதில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பேசினார். சிறப்பு விருந்தினராக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் வேலுச்சாமி எம்.பி, ஒட்டன்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன், ஒன்றியக் குழு பெருந்தலைவர் அய்யம்மாள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர்,வார்டு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×