search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பி.எப். அலுவலகம் சார்பில் கோவையில் ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டம்
    X

    பி.எப். அலுவலகம் சார்பில் கோவையில் ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டம்

    • குறைதீர்ப்பு கூட்டம் வருகிற 28-ந்தேதி நடக்கிறது
    • pghs/rocbe@epfindia/gov/in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் குறைகளை பதிவு செய்யலாம்.

    கோவை,

    கோவை மாவட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சார்பில் கோவை மாவட்டத்தில் வருகிற 28-ந்தேதி அலுவலக மாநாட்டு மண்டபம், பி.பி.டி.சி எஸ்டேட்ஸ் குழு மற்றும் வால்பாறை அலுவலகம் உள்ளிட்ட 3 இடங்களில் குறை தீர்ப்புக்கூட்டம் நடக்க உள்ளது.

    இதேபோல திருப்பூரில் நெட்வொர்க்கிங் ஆடை நிறுவனம், நீலகிரியில் மஞ்சூர் தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை, குந்தா பிரிட்ஜ் போஸ்ட் ஆகிய பகுதிகளிலும் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்படுகிறது.

    எனவே வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் வருகிற 28-ந்தேதி காலை 10.30 மணி முதல் மாலை 12.30 மணி வரை மேற்கண்ட முகாம்களுக்கு நேரில் வந்து உரிய வைப்பு நிதி கணக்கு எண் மற்றும் ஓய்வூதிய நியமன ஆணை எண் ஆகியவற்றுடன் தங்களின் குறைகளை தெரிவிக்கலாம்.

    அல்லது pghs/rocbe@epfindia/gov/in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் குறைகளை பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×