search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மெலட்டூரில் புகையில்லா போகி குறித்த விழிப்புணர்வு பேரணி
    X

    புகையில்லா போகி கொண்டாட வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    மெலட்டூரில் புகையில்லா போகி குறித்த விழிப்புணர்வு பேரணி

    • மெலட்டூர் பேரூராட்சி பகுதியில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • போகி பண்டிகையை முன்னிட்டு தேவையற்ற பழைய பொருள்களையும், பிளாஷ்டிக், கழிவுகளையும் பொது இடங்களில் தூக்கி வீசுவது, தீவைத்து கொளுத்துவதால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படும்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், மெலட்டூர் பேரூராட்சி பகுதியில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் இலக்கியாபட்டாபிராமன் பேரணியை துவக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்.

    பேரணியில் வரும் போகி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தேவையற்ற பழைய பொருள்களையும், பிளாஷ்டிக், கழிவுகளையும் பொது இடங்களில் தூக்கி வீசுவது, தீவைத்து கொளுத்துவதால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுவதோடு காற்று மாசுபடுகிறது ஆகையால் வரும் போகி பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் தேவையற்ற பொருட்களை தங்கள் வீடுதேடி வரும் பேரூராட்சி தூய்மை பணியாளர்களிடம் அல்லது பேரூராட்சி குப்பைகளை சேமித்து பிரிக்ககூடிய வளம் மீட்பு பூங்காவில் வழங்கி புகையில்லாத போகி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடுமாறு பேரூராட்சி சார்பில் பேர ணியில் வலியுறுத்தப்பட்டது.

    இதில் பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன், துணை தலைவர் பொன்னழகுசீனு, உறுப்பினர் காஞ்சிதுரை மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். பேரணி பேரூராட்சி அலுவலகத்தில் துவங்கி முக்கிய வீதிகளை சுற்றி மீண்டும் அலுவலகம் வந்தடைந்தது.

    Next Story
    ×