பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் 3 நீதிபதிகள் பங்கேற்பு

பரமத்தி பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள சமுதாயக் கூட்டத்தில் நடைபெற்றது.பொதுமக்கள் கடைக்கு வரும்போது மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
கூட்டத்தில் நீதிபதிகள் கலந்து கொண்டு பேசிய போது எடுத்த படம்.
கூட்டத்தில் நீதிபதிகள் கலந்து கொண்டு பேசிய போது எடுத்த படம்.
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள சமுதாயக் கூட்டத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் மணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ரமேஷ் பாபு முன்னிலை வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பரமத்தி சட்டப் பணிக்குழு தலைவரும், சார்பு நீதிமன்ற நீதிபதியுமான பிரபாகரன், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சுப்ரமணி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது நீதிபதிகள் பேசும்போது, பரமத்தி பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்க வேண்டும். பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளில் சூடான பொருட்களை வாங்கி கொண்டு சென்று சாப்பிடும் போது மனிதனின் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும் எடுத்துக் கூறினார்கள். பிளாஸ்டிக் பைகள் கால்வாய் மற்றும் ஆறுகளில் தண்ணீரில் மிதந்து செல்லும்போது கால்நடைகள் தண்ணீரை குடிக்கும் போது தண்ணீரில் மிதந்து வந்த பிளாஸ்டிக் பைகள் கால்நடையின் உடலுக்குள் சென்று கால்நடைகள் உயிரிழக்கும் ஆபத்து ஏற்படுகிறது. எனவே மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பேசி வணிகர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் .

அதே போல் பொதுமக்கள் கடைக்கு வரும்போது மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் வழக்கறிஞர்கள், வார்டு கவுன்சிலர்கள், வணிகர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர், அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரமத்தி பேரூராட்சி இளநிலை உதவியாளர் அண்ணாதுரை செய்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com