போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு

போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துக் கூறினார். இறுதியில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு
Published on

நீடாமங்கலம்:

திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் நடைபெற்றது.

இதில் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதிலிருந்து தங்களை எவ்வாறு காப்பாற்றி கொள்வது என்பது குறித்தும், போதை பொருளுக்கு அடிமையான ஒருவரை எவ்வாறு மீட்க வேண்டும் என்பது குறித்தும் இன்ஸ்பெக்டர் ராஜா பேசினார்.

பின்னர், மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இறுதியில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com