search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் ஊழல் தடுப்பு குறித்து கலைநிகழ்ச்சியுடன் விழிப்புணர்வு
    X

    கல்லூரி மாணவ-மாணவிகள் நடத்திய விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி.

    திண்டுக்கல்லில் ஊழல் தடுப்பு குறித்து கலைநிகழ்ச்சியுடன் விழிப்புணர்வு

    • தமிழகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் நவம்பர் 5-ந்தேதி வரை ஊழல் தடுப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    • திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்புபிரிவு போலீஸ் சார்பில் பஸ்நிலையத்தில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் அக்டோபர் 30 முதல் நவம்பர் 5-ந்தேதி வரை ஊழல் தடுப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்புபிரிவு போலீஸ் சார்பில் பஸ்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ரூபா தலைமையில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

    ஊழலை மறுப்போம், தேசத்தை காப்போம் என்ற தலைப்பில் கல்லூரி மாணவ-மாணவிகள் காவடியாட்டம், தேவராட்டம், கரகாட்டம் ஆடியபடி விழிப்புணர்வு பாடல்கள் பாடி பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர். பயணிகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×