search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக அம்பை, வீரவநல்லூரில் 6-ந் தேதி மின்தடை
    X

    மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக அம்பை, வீரவநல்லூரில் 6-ந் தேதி மின்தடை

    • கல்லிடைக்குறிச்சி கோட்டத்தை சேர்ந்த ஓ.துலுக்கர்பட்டி, வீரவநல்லூர், அம்பை, மணிமுத்தாறு, கடையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • 6-ந் தேதி காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகத்தின் கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் ( விநி யோகம்) சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    கல்லிடைக்குறிச்சி ேகாட்டத்தை சேர்ந்த ஓ.துலுக்கர்பட்டி, வீரவநல்லூர், அம்பை, மணிமுத்தாறு, கடையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை மறுநாள் ( சனிக்கிழமை) மின் விநியோகம் தடைபடும்.

    அதன்படி ஓ.துலுக் கர்பட்டி துணை மின்நிலை யத்தில் இருந்து மின் விநியோகம் பெரும் ஆழ்வான்துலுக்கர்பட்டி, ஓ.துலுக்கர்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்த நாடார்ப்டடி, தாழையூத்து, பனையங் குறிச்சி, நாலாங்கட்டளை, கீழ குத்தப்பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை பகுதிகளில் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    அதேபோல் வீரவ நல்லூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான கல்லிடைக் குறிச்சி, காரைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், கூனி யூர், வெள்ளாங்குளி, புதுக்குடி, ரெங்கசமுத்திரம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும். அம்பாசமுத்திரம் துணை மின்நிலையம் மூலம் மின்விநியோகம் பெறும் அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார் கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி பகுதிகளில் காலை 9 மணிமுதல் 2 மணி வரை மின்தடை இருக்கும். மணிமுத்தாறு துணை மின்நிலையத்திற்குட்பட்ட மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவி குளம், பொன்மாநகர், தெற்கு பாப்பன்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை. ஆலடியூர், ஏர்மாள்புரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    கடையம் துணைமின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் ஆவுடையானூர், மணல் காட்டானூர், பண்டாரகுளம், வள்ளியம்மாள்புரம், பாப்பான்குளம், கடையம், மற்றும் சிவநாடானூர் ஆகிய பகுதிகளில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×