search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சி அருகே முகமூடி அணிந்து வந்து ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி
    X

    பொள்ளாச்சி அருகே முகமூடி அணிந்து வந்து ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி

    • முகமூடி அணிந்த மர்ம நபர் கண்காணிப்பு காமிராவை அடித்து உடைத்து துணிகரம்
    • கோட்டூர் போலீசார் வழ்க்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் தொழிற்பேட்டை பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு 12.15 மணிக்கு முக மூடி அணிந்த மர்ம நபர் வந்தார்.அவர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவை இரும்பு கம்பியால் அடித்து உடைத்தார். பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றார். அப்போது ஆள் நடமாட்டம் இருந்ததால் அவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழ்க்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×