search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே வாலிபர் மீது தாக்குதல்
    X

    களக்காடு அருகே வாலிபர் மீது தாக்குதல்

    • களக்காடு அருகே உள்ள மேலவடகரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சிவசாமிக்கும், சுரேஷ் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.
    • சுரேஷ், இசக்கி, தாயம்மாள் ஆகியோர் சிவசாமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மேலவடகரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி சிவசாமி (வயது 20). இவருக்கும், அதே தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.

    சம்பவத்தன்று சிவசாமி தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுரேஷ், இசக்கி, தாயம்மாள் ஆகியோர் சிவசாமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேஷ் உள்பட 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×