search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலப்பாளையம் அருகே 2 பேர் மீது தாக்குதல்; வாலிபர் கைது
    X

    மேலப்பாளையம் அருகே 2 பேர் மீது தாக்குதல்; வாலிபர் கைது

    • மேலப்பாளையம் அருகே உள்ள மேலநத்தம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தர் (வயது28). இவரது உறவினர் சுரேஷ் (28).
    • அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (21) என்பவர் 2 பேரிடமும் தகராறு செய்தார்.

    நெல்லை:

    மேலப்பாளையம் அருகே உள்ள மேலநத்தம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தர் (வயது28). இவரது உறவினர் சுரேஷ் (28). இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (21) என்பவர் அவர்களிடம் தகராறு செய்தார்.

    இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் அவர்களை அவதூறாக பேசி கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் மேலப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்தார்.

    Next Story
    ×