search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
    X

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

    • அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுஅமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை யொட்டி சட்டமன்ற நாயகர் கலைஞர் என்ற தலைப்பில் 2 நாட்கள் கருத்தரங்கம் நடை பெற்றது.

    இதில் உடையார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஜெய ங்கொண்டம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரிகளில் முதல் நாள் கருத்தரங்கம் நடை பெற்றது.

    இதைத்தொடர்ந்து 2-ம் நாள் கருத்தரங்கம், செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நாகமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

    இந்த கருத்தரங்கத்திற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, எம்.எல்.ஏ.க்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் சிவசங்கர் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாட்டை கல்வியில் சிறந்த மாநிலமாக மாற்றிய பெருமை கருணாநிதியைேய சேரும். அந்த வகையில் மாண வர்களுடைய அறிவுத்திறன் கருணாநிதியை பற்றிய புரிந்து ணர்வு, சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பு இவற்றை யெல்லாம் மாணவர்கள் பேச்சுப்போட்டி வாயிலாக எடுத்துரைத்துள்ளனர்.

    இதனுடைய விளைவு இன் றைக்கு இருக்கின்ற இளம் பிள்ளைகள் நாளைய தினம் திராவிட சிந்தனையோடும், மொழி உணர்வோடும், பெரி யார், அண்ணா, கருணாநிதி ஆகி யோரின் கனவினை நனவாக்கி சமூகத்திற்கு பணியாற்றுகின்ற நல்லப் பணியை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துகின்ற வாய்ப்பினை தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து இப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசுகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சிகளில் சட்டப்பே ரவை கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன், சட்டப்பேரவை துணை செயலர் அய்யம்பெ ருமாள், சட்டப்பேரவை துணை செயலாளர் சாந்தா, சட்டப்பேரவை சார்பு செயலர் லோகநாதன், மண்டல இணை இயக்குநர் தன்ராஜ் (தஞ்சாவூர்), அரியலூர் வருவாய் கோட்டாட்சி யர் ராமகிருஷ்ணன், உடையார்பா ளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, அரியலூர் நகராட்சி உறுப்பி னர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட னர்.

    Next Story
    ×