search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ம.க. கலந்தாய்வு கூட்டம்
    X

    பா.ம.க. கலந்தாய்வு கூட்டம்

    • அன்புமணி ராமதாசை முதல்வராக்குவே நோக்கம் என்று அறிவிப்பு
    • அரியலூரை சேர்ந்த ஏராளமான பா.ம.க.வினர் பங்கேற்பு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க செயல் திட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட வன்னியர் சங்கத் தலைவர் பூ.த. அருள்மொழி, பின்னர் செய்தியா ளர்களிடம் கூறி யதாவது:-ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அமைப்பு தலைவர்கள் அமைப்புச் செயலாளர்கள் மூலம் கிராமங்கள் தோறும் கிளை அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த செயல்திட்ட கலந்தாய்வு கூட்டங்கள் நடைபெற்று வருகிறது .மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் கட்சி கிளைகளை ஏற்படுத்தி கட்சிப் பணிகளை ஆற்ற வேண்டும். தற்போது நடைபெற்ற இடைத்தேர்தல் பா.ம.க.-வுக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது வரவுள்ள தேர்தலுக்குள் அமைப்பு பணிகளை கிராமங்கள் தோறும் ஏற்படுத்துவதன் மூலம் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது .எங்களது நோக்கம் எல்லாம் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும். அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சராக வேண்டும் என்பது தான் எங்களது முக்கிய குறிக்கோளாகும் அதை நிச்சயம் நிறைவேற்றி காட்டுவோம் என்றார். கூட்டத்தில், மாநில அமைப்புத் தலைவர் செந்தாமரை கண்ணன், மாநில அமைப்புச் செயலர் தருமபுரி.ப.சண்முகம் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ம.க மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர்-பகுதியைச் சேர்ந்த அமைப்பு செயலாளர்கள், தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×