search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி ஆர்ப்பாட்டம்
    X

    சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி ஆர்ப்பாட்டம்

    • அரியலூரில் சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி ஆர்ப்பாட்டம்
    • காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு மையங்கள் மூலம் சத்துணவு ஊழியர்களை கொண்டு அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்

    அரியலூர்,

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் மடியேந்தி புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு மையங்கள் மூலம் சத்துணவு ஊழியர்களை கொண்டு அமல்படுத்த வேண்டும்.காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் செல்வி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் காந்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் என்.வேல்முருகன் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் எம்.கே.ஷேக் தாவூத் நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் அச்சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் செல்வி, மாவட்ட பொருளாளர் ஆனந்தவள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மடியேந்தி முழக்கமிட்டனர்.

    Next Story
    ×