search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூர் அருகே - குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
    X

    அரியலூர் அருகே - குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

    • அரியலூர் மாவட்டம், ராயம்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதியில் கடந்த சில வாரங்களாக சீரான குடிநீர் விநியோகிக்க ப்படவில்லை.
    • இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், ராயம்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதியில் கடந்த சில வாரங்களாக சீரான குடிநீர் விநியோகிக்க ப்படவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்த ப்பட்ட ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செந்துறை காவல் துறையினர் மற்றும் ஊராட்சித் தலைவர் ஆகியோர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போ க்கு வரத்துபா திக்கப்பட்டது.

    Next Story
    ×