அரியலூர் ஆலந்துறையார் கோவிலில் மகாகும்பாபிஷேகம்

அரியலூர் ஆலந்துறையார் கோவிலில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது37 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது
அரியலூர் ஆலந்துறையார் கோவிலில் மகாகும்பாபிஷேகம்
Published on

அரியலூர்,

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அரியலூர் மிகப்பெரிய சமஸ்தானமாக இருந்து வந்தது.சோழர்கால பேரரசிற்கு பிறகு அரியலூர் ஜமீன்தார்கள் ஆட்சி செய்து வந்தனர். சுமார் 600ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவிஜயஒப்பில்லாத மழவராயர் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீஅருந்தவநாயகி உடனுறை ஸ்ரீஆலந்துறையார் கோவில் கட்டப்பட்டது. 1808 ஆம் ஆண்டுக்கு பின்னர் 1986 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதை கோவில் கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிந்தது.

தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோவில் இருந்து வருகிறது. இந்துசமய அறநிலையத்துறை, ஓம்நமசிவாய திருப்பணிக்குழு, ஸ்ரீநரசிம்மா டிரஸ்ட் இணைந்து பொதுமக்கள் பங்களிப்போடு அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கிராம சாந்தி, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தீப விளக்கு பூஜை, மகாலெட்சுமி ஹோமம், நான்கு கால பூஜைகளுடன் தீபாராதனை நடைபெற்றது. ராஜகோபுரம், சுவாமி, அம்பாள் மற்றும் அனைத்து விமான கலசத்திற்கும் புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டடு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம், இனிப்பு பொங்கல், பிரசாதங்கள்,குடிநீர் வழங்கப்பட்டது. இதையடுத்து சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பாபிஷே விழாவில் அரியலூர் நகரம், சுற்றுவட்டார கிராம பொதுமக்கள், சிவதொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com