search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூர் மாவட்டத்தில் ஜமாபந்தி 13-ம் தேதி தொடங்குகிறது
    X

    அரியலூர் மாவட்டத்தில் ஜமாபந்தி 13-ம் தேதி தொடங்குகிறது

    • இதில் கலெக்டர் கலந்து கொள்கிறார்
    • ஆண்டிமடம் தாலுக்கா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமையில் ஜமாபந்தி நடைபெறுகின்றது.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், உடையார்பாளையம், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய 4 தாலுக்கா அலுவலகங்களில் ஜமாபந்தி நடைபெறுகின்றது. உடையார்பாளையம் வட்டாட்சியர்அலுவலகத்தில் வரும் 13ம் தேதி மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் துவங்குகின்றது. இருகையூர், காரைகுறிச்சி, வாழைக்குறிச்சி, தென்கச்சிபெருமாள்நத்தம், தா.பழுர், கோடங்குடி, நாயகனைப்பிரியாள், இடங்கன்னி, உதயநத்தம், அனைக்குடம், சோழமாதேவி, கோடாலிகருப்பூர், வேம்புக்குடி ஆகிய கிராமங்களில் 13ந்தேதியும், 14ம் தேதி மணகெதி, உல்லியக்குடி, வெண்மாண்கொண்டான், பருக்கல், கோவிந்தபுத்தூர், நடுவலூர், சுத்தமல்லி, கீழநத்தம். ஆம்பாபூர். உடையவரிதியனூர், கடம்பூர், சாத்தம்பாடி, ஸ்ரீபுரந்தான் ஆகிய கிராமங்களிலும், 15ம் தேதி பாப்பாக்குடி, தர்மசமுத்திரம், இளையபெருமாள்நல்லூர், குண்டவெளி, முத்துசேர்வைமடம், காட்டாகரம், குலோத்துங்கநல்லூர், தழுதாயமேடு, குருவாலப்பர்கோவில் ஆகிய கிராமங்களுக்கும், 16ம் தேதி தேவமங்கலம், அங்குராயநல்லூர், சூரியமணல், இடையார், வாணதிரையான்பட்டிணம். புpலிச்சைகுழி, உடையார்பாளையம், கோழங்குறிச்சி, தத்னூர் ஆகிய கிராமங்களுக்கும், 20ம் தேதி எரவாங்குடி, தண்டலை, கீழக்குடியிருப்பு, பிராஞ்சோரி, பிச்சனூர், வெட்டியர்வெட்டு, ஆமணக்கம்தோண்டி, உட்கோட்டை, பெரியவளையம், ஜெயங்கொண்டம் ஆகிய கிராமங்களிலும் நடைபெறுகிறது.

    ஆண்டிமடம் தாலுக்கா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமையில் ஜமாபந்தி நடைபெறுகின்றது. 13ம் தேதி ஓலையூர், ஆத்துக்குறிச்சி, ஸ்ரீராமன், ராங்கியம், சிலுவைச்சேரி, அழகாபுரம், ஆண்டிமடம், விளந்தை, வரதராஜன்பேட்டை, பெரியகிருஷ்ணாபுரம், திருகளப்பூர், அணிக்குதிச்சான் ஆகிய கிராமங்களுக்கும், 14ம் தேதி சிலம்பூர், இடையக்குறிச்சி, அய்யூர், கூவத்தூர், காட்டாத்தூர், குவாகம், கொடுக்கூர், மருதூர், வாரியங்காவல், தேவனூர், இலையூர், மேலூர் ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறுகின்றது.

    செந்துறை தாலுக்கா அலுவலகத்தில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் தலைமையில் ஜமாபந்தி நடைபெறுகின்றது. 13ம் தேதி ஆணந்தவாடி, உஞ்சினி,மருவத்தூர், பெரியகுறிச்சி, வஞ்சினாபுரம், நமங்குணம், நக்கம்பாடி, செந்துறை ஆகிய கிராமங்களுக்கும், 14ம் தேதி சிறுகளத்தூர், பொண்பரப்பி, நாகல்குழி, பரணம், கிளிமங்கலம், இரும்புலிக்குறிச்சி, கீழமாளிகை, பிலாக்குறிச்சி, சிறுகனூர் ஆகிய கிராமங்களுக்கும், 15ம் தேதி சன்னாசிநல்லூர், தளவாய், ஆலத்தியூர், ஆதனக்குறிச்சி, மணக்குடையான், அயன்தத்னூர், மணப்பத்தூர், அசாவீரன்குடிக்காடு, தொளார் ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறுகின்றது.

    அரியலூர் தாலுகா அலுவலகத்தில் கோட்டாட்சியர் இராமகிருஷ்ணன் தலைமையில் 13ம் தேதி ஜமாபந்தி துவங்குகின்றது. பொட்டவெளி, இலுப்பையூர், இராயம்புரம், சென்னிவணம், ஓட்டக்கோவில், கோவிந்தபுரம், அமீனாபாத், அரியலூர் வாலாஜாநகரம், கயர்லாபாத், கல்லங்குறிச்சி, கடுகூர், அயன்ஆத்தூர், பெரியநாகலூர், தேளுர், காவனூர், விளாங்குடி ஆகிய கிராமங்களுக்கும், 14ம் தேதி நாகமங்கலம். ரெட்டிபாளையம், புதுபாளையம், சிறுவளுர், கருப்பூர்சேனாபதி, இடையத்தான்குடி, பெரியதிருக்கோணம், ஆலந்துறையார்கட்டளை, கருப்பிலாகட்டளை, அருங்கால், ஆண்டிபட்டாக்காடு, புங்கங்குழி, ஓரியூர் ஆகிய கிராமங்களுக்கும், 15ம் தேதி மல்லூர், வாரணவாசி, பார்ப்பனச்சேரி, பூண்டி, மேலப்பழுர், கீழப்பழுர், கீழையூர், சாத்தமங்கலம், அயன்சுத்தமல்லி, வெங்கனூர், சன்னாவூர், பளிங்காநத்தம், கரைவெட்டி, கீழக்காவாட்டாங்குறிச்சி, வெற்றியூர் ஆகிய கிராமங்களுக்கும், 16ம் தேதி கோவில்எசனை, எலந்தைகூடம், குலமாணிக்கம், கண்டிராதீத்தம், திருமழப்பாடி, அண்ணிமங்கலம், மஞ்சமேடு, திருமானூர், வடுகபாளையம் ஆகிய கிராமங்களுக்கும், 20ம் தேதி விழுப்பணங்குறிச்சி, கீழகொளத்தூர், சின்னபட்டாக்காடு, கோவிலூர், சுள்ளங்குடி, ஏலாக்குறிச்சி, அழகியமணவாளம், காமரசவல்லி, தூத்தூர் ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறுகின்றது.

    Next Story
    ×