ஜெயங்கொண்டம் மக்கள் நீதி மன்றத்தில் 138 வழக்குகளுக்கு உடனடி தீர்வு

ஜெயங்கொண்டம் மக்கள் நீதி மன்றத்தில் 138 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டதுஇதில் 400 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஜெயங்கொண்டம் மக்கள் நீதி மன்றத்தில் 138 வழக்குகளுக்கு உடனடி தீர்வு
Published on

ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டம் சட்டப்பணிகள் குழுவின் சார்பில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் 400 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 2 சிவில் வழக்குகளுக்கு ரூ. 5 லட்சத்து, 25 ஆயிரம், 2 மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு ரூ. 17 லட்சத்து, 87 ஆயிரம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி வழக்குகளில் 21 வழக்குகளில் ரூ.8 லட்சத்து 64 ஆயிரமும் தீர்வு காணப்பட்டது. மேலும், இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் ஜெயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டத்திற்க்காக கையகப்படுத்திய வழக்கில், நிலங்களை அந்தந்த நில உரிமையாளரிடம் ஒப்படைக்கும் விதத்தில் 113 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

இந்த மக்கள் நீதிமன்றத்தினை ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதியும் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவருமான லதா, அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் நீதிபதி அழகேசன் முன்னின்று நடத்தினர். மேலும் ஜெயங்கொண்டம் நீதித்துறை நடுவர் எண். 1 ராஜசேகரன் மற்றும் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கணேஷ் , அரசு வழக்கறிஞர்கள் .மோகன் ராஜ், செந்தில்குமார், தனி வட்டாட்சியர் (நிலம் எடுப்பு) வேலுமணி, மற்றும் சுசீலா, மேலும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த மக்கள் நீதிமன்றத்துக்கான ஏற்பாடுகளை ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் நிர்வாக உதவியாளர் லெபர்ன் வசந்த ஹாசன் செய்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com