என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிலக்கடலை விதைகளை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை
- அரியலூர் மாவட்டத்தில், நிலக்கடலை விதைகளை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை
- விதை ஆய்வு துணை இயக்குநர் எச்சரிக்கை
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில், நிலக்கடலை விதைகளை கூடு தல் விலைக்கு விற்றால் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநர் கோவிந்தராசு தெரி வித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:-
அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர், ஆண்டிம டம்,ஜெயங்கொண்டம் வட்டா ரங்களில், கார்த்தி கை பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நிலக்கடலையில் நல்ல விளைச்சல் பெற தரமான விதைகளை கொண்டு விதைப்பு செய்வ து மிகவும் முக்கியமா னதாகும்.
நல்ல தரமான விதைக ளை விவசாயி களுக்கு கிடைத்திட விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றுத் துறை தேவையான நடவ டிக்கை களை மேற்கொண்டு வருகிறது. விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விதைகளை வாங்கும் போது அரசினால் விதை விற்பனை செய்ய உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்க வேண்டும்.
விதைகள் வாங்கும் போது உரிய விற்பனை ரசீது கேட்டுப் பெற வேண்டி யது மிகவும் அவசியமாகும். விற்பனை ரசீது அறுவடை முடியும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
நில கடலை விதைகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் விற்ப னை உரிமம் பெற்று இருக்க வேண்டும். நல்ல மு ளைப்புத் திறன் உள்ள நிலக்கடலை விதைகளை விற்பனை செய்ய வேண்டும்.
கூடுதல் விலைக்கு விற்றாலோ எடைகுறைவாக விற்றாலோ ரசீது இல்லாமல் விற்றாலோ விதைச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே விவசாயிகள் தங்க ளுக்குத் தேவையான விதை களை வேளாண் விரிவாக்க மையங்களில் பெறலாம்.






