search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ் பண்பாட்டு பேரமைப்பின் பொதுக்குழு கூட்டம்
    X

    தமிழ் பண்பாட்டு பேரமைப்பின் பொதுக்குழு கூட்டம்

    • அரியலூரில் தமிழ் பண்பாட்டு பேரமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
    • பள்ளிகளில் இலக்கிய மன்ற விழா நடத்திட தீர்மானம்

    அரியலூர்,

    அரியலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்துக்கு தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். அமைப்பின் செயலாளராக இருந்த செம்மொழி ராமசாமி அமைப்பாளராகவும், துணைத் தலைவராக இருந்த கதிர்கணேசன் செயலாளராகவும் செயல்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆண்டுதோறும் தமிழ்ப்பண்பாட்டுப் பேரமைப்பு சார்பாக இலக்கிய மன்ற விழா நடத்தி மாணவர்களின் தனித் திறமைகளை வெளிக் கொண்டு வருதல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அமைப்புச் செயலாளர் நல்லப்பன், புலவர் இளங்கோவன், பொருளாளர் புகழேந்தி, திருவள்ளுவர் ஞானமன்ற நிறுவனர் பன்னீர் செல்வம், தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு நிர்வாகிகள் அஞ்சை ராவணன், ஓவிய கவிஞர் அன்பு சித்திரன், ஜோதிராமலிங்கம், செல்லப்பண்டியன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். முடிவில் செய்தி தொடர்பாளர் தமிழ்க்களம் இளவரசன் நன்றி கூறினார்.

    Next Story
    ×