தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

அரியலூர் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றதுகருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சு
தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
Published on

அரியலூர்,

அரியலூரில் செந்துறை ரோடு புறவழிச்சாலையில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் அரியலூர் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. அரியலூர் தொகுதி பொறுப்பாளர் சல்மா, சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபாசந்திரசேகர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், கொள்கை பரப்பு துணை செயலாளர் பெருநற்கிள்ளி,தலைமைசெயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், மாவட்டதுணை செயலாளர் சந்திரசேகர், லதாபாலு, நகர செயலாளர் முருகேசன், கருணாநிதி, இளைஞரணி துணைஅமைப்பாளார் லூயிகதிரவன், வக்கீல் சசிகுமார், ஒன்றிய செயலாளர் அன்பழகன், அறிவழகன், செந்துறை செலர்வராஜ், எழில்மாறன், திருமானூர் கென்னடி, அசோகசக்கரவர்த்தி,

ஆண்டிமடம் கலியபெருமாள், முருகன், ஜெயங்கொண்டம் தனசேகரன், மணிமாறன் தா.பழுர் சௌந்தர்ராஜன், கண்ணன் உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொண்டு பேசியதாவது:-தமிழகத்தை உருவாக்கிய சிற்பி, ஜனாதிபதி, பிரதமர்களை உருவாக்கிய மாமனிதர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை மிகச்சிறப்பாக கொண்டாட வேண்டும். ஒவ்வொருவரும் குடும்ப விழாவாக கருதிட வேண்டும். போக்குவரத்துத்துறை அமைச்சர் என்ற முறையிலும், மாவட்டச் செயலாளர் என்ற முறையிலும் கேட்டுக்கொள்கிறேன். கருணாநிதி நூற்றாண்டு விழாவைகொண்டாடுவது நமது அனைவரி ன் கடமையாகும்.மற்ற மாவட்டங்களைவிட அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம பகுதிகளிலும் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் கொடிக்கம்பங்கள் அமைத்து கட்சி கொடி ஏற்றி வைத்து சிறப்பாக கொண்டாட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com