என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தி.மு.க. அரசின் 2 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம்
- அரியலூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது
- அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு பேசினார்
அரியலூர்,
அரியலூர் அண்ணாசிலை அருகே நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.நகர செயலாளர் முருகேசன் தலைமைதாங்கினார். நகர தலைவர் மாலாதமிழரசன் முன்னிலை வகித்தார். நகர் மன்ற தலைவர் சாந்தி கலைவாணன், துணைதலைவர் கலியமூர்த்தி, இளைஞரணிதுணை அமைப்பாளர் லூயிகதிரவன், மாவட்ட வக்கில் அணி அமைப்பாளர் சின்னதம்பி, பொறியாளர் அணி தங்கை எழில்மாறன், மகளிரணி காந்திமதி, மாவட்டதொழிலாளர் அணி மகேந்திரன், மாணவரணி சக்திவேல், ஒன்றியசெயலாளர் அன்பழகன், நகரபொருளாளர் ராஜேந்திரன், நகரதுணைசெயலாளர் செல்வராணி ரவீந்தர், உதயநிதிஸ்டாலின் ரசிகர் மன்ற தலைவர் லோகுசரவணன் உட்பட அனைத்து பிரிவு பொருப்பாளர்களும் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-மக்களின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருவதாக பிற மாநில முதல்வர்கள், தமிழக முதல்வரை பாராட்டி வருகின்றனர். கொரோனா நிதி, மகளிர் இலவச பயணத்திட்டம் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட திட்டம். ஆனால், புதுமைப் பெண் திட்டம் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்படாத திட்டம். இத்திட்டம் கிராமபுற மாணவிகள் உயர்கல்வி பெற வழிவகை செய்துள்ளது. பெண் கல்வி வளர்ந்தால், நாடு வளர்ச்சி அடையும் என்பதே முதல்வரின் திட்டமாகும்.தமிழகத்தில் நடைபெற்று வரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியை இந்தியாவே திரும்பி பார்க்கிறது.இவ்வாறு அமைச்சர் கூறினார். கூட்டமுடிவில் நகரதுணை செயலாளர் வக்கில் விஜயகுமார் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்