search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட கோரிக்கை
    X

    அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட கோரிக்கை

    • சட்டமன்றத்தில் எம்எல்ஏ வக்கீல் சின்னப்பா கோரிக்கை வைத்தார்
    • பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர ரகுபதி பதில்

    அரியலூர், அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்து கொடுக்க வேண்டும் - சட்டமன்றத்தில்வக்கில் கு.சின்னப்பா எம்எல்ஏ கோரிக்கை வைத்து பேசினார். அப்போது அவர் பேசும்போது,அரியலூரில் சுமார் 150 ஆண்டு காலமாக கோர்ட் செயல்பட்டு வருகின்றது. ஆங்கிலேயர் காலத்தில் இந்த நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டது. 2007ம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதியால் அரியலூர் மாவட்டம்உ ருவாக்கப்பட்டது. அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் அமைத்து கொடுக்க வேண்டும் என்பதுநீண்ட நாள் கோரிக்கையா கும். அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்துகொடுக்க வேண்டும் என கேட்டுக்கொ ள்கிறேன் என எம்எல்ஏ வக்கில் கு.சின்னப்பா பேசினார்,இதற்கு பதிலளித்து அமைச்சர் ரகுபதி பேசும்போது, தொகுதி எம்எல்ஏவின் கோரிக்கை வரும் காலத்தில் பரிசிலிக்கப்படும் என பதிலளித்தார்.

    Next Story
    ×