மத்திய அரசு-கவர்னரை கண்டித்து அரியலூரில் சி.பி.எம். ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு-கவர்னரை கண்டித்து அரியலூரில் சி.பி.எம். ஆர்ப்பாட்டம் நடத்தினர் ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்
மத்திய அரசு-கவர்னரை கண்டித்து அரியலூரில் சி.பி.எம். ஆர்ப்பாட்டம்
Published on

அரியலூர்:

அரியலூர் அண்ணா சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில், உரம் மற்றும் உணவு மானியங்களை மத்திய அரசு நிறுத்தியது, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு போதுமான நிதியை ஒதுக்காததைக் கண்டித்தும், எல்.ஐ.சி, வங்கிகள் மற்றும் பொது த்துறை நிறுவனங்களின் பங்குகளை மோசடி செய்த அதானியை கைது செய்து, சொத்துக்களை முடக்க வேண்டும்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதியை ஒதுக்கீடு செய்து, பணியை உடனடியாக தொடக்க வேண்டும் , அரியலூர் நகராட்சியுடன் அருகிலுள்ள கிராமங்களை இணைத்து எல்லையை விரிவாக்கம் செய்ய வேண்டும். அரியலூர் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனைக்கு பேருந்து மற்றும் ஷேர் ஆட்டோக்களை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் காரல்மார்க்ஸ் சிந்தனை களை விமர்சித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் எம்.இளங்கோவன் தலைமை வகித்தார்.மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.கிருஷ்ணன், து.அருணன், டி.அம்பிகா, கந்தசாமி, இர.மணிவேல் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com