search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது
    X

    ஜெயங்கொண்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

    • ஜெயங்கொண்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யபட்டனர்
    • தமிழ்நாடு ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு தமிழ்நாடு ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசியல் அமைப்புச் சட்டத்தையும் அதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள மாநில உரிமைகளையும் பாதுகாக்க கூட்டாட்சி கோட்பாடுகளை நிலைநிறுத்த வேண்டும் என கூறி ஆளுநர் ரவியை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 15 பேரை ஜெயங்கொண்டம் காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

    Next Story
    ×