search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கிடையே மோதல்-வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை
    X

    ஜெயங்கொண்டத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கிடையே மோதல்-வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை

    • ஜெயங்கொண்டத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது
    • ஏற்கனவே சங்கத்தில் 25 ஆட்டோக்கு மேல் இருப்பதால் சவாரி சரியான முறையில் கிடைக்கவில்லை என தெரிவித்து அவர்களை சங்கத்தில் சேர்க்காமல் இருந்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் 20 வருடத்திற்கு மேலாக ஆட்டோ டிரைவர்கள் சங்கம் அமைத்து இருந்து வந்தனர். அந்த சங்கத்தில் டிரைவராக இருந்தவர்கள் புதிதாக ஆட்டோ வாங்கிக் கொண்டு எங்களையும் சங்கத்தில் சேர்த்துக் கொள் வேண்டும் என தெரிவித்தனர். ஆனால் ஏற்கனவே சங்கத்தில் 25 ஆட்டோக்கு மேல் இருப்பதால் சவாரி சரியான முறையில் கிடைக்கவில்லை என தெரிவித்து அவர்களை சங்கத்தில் சேர்க்காமல் இருந்தனர். அவர்கள் புதிதாக ஆட்டோ சங்கம் அரசு பதிவு செய்து ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் சங்க பேனரை யாருக்கும் சொல்லாமல் யாரிடமும் எந்த அனுமதியும் பெறாமல் வைத்தனர். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர்கள் அந்த பேனரை கிழித்துள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம் இருதரப்பினரையும் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை நகராட்சி ஆணையர் திருமூர்த்தி, காவல் ஆய்வாளர் வேலுச்சாமி உள்ளிட்டவர்கள் தலைமையில் ஜெயங்கொண்டம் பகுதியில் இயங்கி வரும் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் அழைத்து தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு தரப்பினரும் மிகுந்த வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு நீண்ட நேரம் பேச்சு வார்த்தைக்கு பின் புதிதாக ஆரம்பித்த ஆட்டோ சங்கத்தை பேருந்து நிலையத்தில் அமைக்க கூடாது. இதனால் பல வருடங்களாக சங்கம் வைத்து ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள் பாதிப்பிற்கு உள்ளாவார்கள். எனவே நீங்களும் ஏற்கனவே இருந்த சங்கத்தில் ஒற்றுமையாக இருந்து ஆட்டோவை போட்டுக் கொள்ள வேண்டுமென்று ஒருமனதாக பேச்சுவார்த்தை முடிந்தது. மேலும் ஜெயங்கொண்டத்தில் இயங்கி வரும் அனைத்து ஆட்டோ உரிமங்கள் மற்றும் ஓட்டுனர் உரிமம் அனைத்தையும் காவல் நிலையத்தில் தர வேண்டும், உங்களுடைய மொபைல் நம்பரை பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆட்டோ டிரைவர்களிடம் வட்டாட்சியர் துறை ஆய்வாளர் வேலுச்சாமி தெரிவித்தார்.


    Next Story
    ×