search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
    X

    பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

    • அரியலூரில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
    • கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அழைப்ப விடுத்துள்ளார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு ராபி மற்றும் சிறப்பு பருவங்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் "யுனிவர்சல் சோம்ப்போ ஜெனரல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்" என்ற முகமையின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் சிறப்பு பருவத்தில், நெல், பருத்தி, மக்காச்சோளம் ஆகிய பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், குண்டவெளி, உடையார்பாளையம், தா.பழூர், சுத்தமல்லி, அரியலூர், நாகமங்கலம், ஏலாக்குறிச்சி, கீழப்பழூர், மாத்தூர், செந்துறை, நாகமங்கலம், பொன்பரப்பி, ஜெயங்கொண்டம், திருமானூர், ஆர்.எஸ்.மாத்தூர் ஆகிய பிர்காக்களிலும் பயிர் காப்பீடு செய்ய அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் ராபி பருவத்தில் உளுந்து பயிருக்கும் பயிர் காப்பீடு செய்துகொள்ளவும் அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    எனவே பருத்தி பயிருக்கு அக்.31 ஆம் தேதி வரையிலும், நெல் மற்றும் மக்காச்சோளம் பயிருக்கு நவ.15 ஆம் தேதி வரையிலும், உளுந்து பயிருக்கு நவ.30 ஆம் தேதி வரையிலும், நிலக்கடலை பயிருக்கு பிப்.15 ஆம் தேதி வரையிலும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×