search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
    X

    போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

    • கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு
    • எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் நடைபெற்ற போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை எம்.எல்.ஏ. கண்ணன் துவக்கி வைத்தார்.பேரணிக்கு கல்லூரி முதல்வர் கலைச்செல்வி தலைமை வகித்து பேசினார். பேரணியானது கல்லூரியில் துவங்கி அண்ணா சிலை, நான்கு ரோடு, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கல்லூரியில் முடிவடைந்தது.முன்னதாக போதைப் பொருள் ஒழிப்பு குறித்து வாசகங்களை எம்.எல்.ஏ. வாசிக்க பின் தொடர்ந்து மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் வாசித்து உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். போதைப் பொருட்களால் ஏற்படும் விளைவுகள் சமூகத்தில் சில குடும்பங்கள் படும் அல்லல்கள் போன்றவற்றைப் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. கல்லூரி பேராசிரியர்கள் தமிழ்த்துறை வடிவேல், கணினி துறை கார்த்திகேயன், வணிகவியல் துறை சக்திமுருகன் மற்றும் அனைத்து துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் தங்கமணி உள்ளிட்ட போலீசார் மாணவ, மாணவிகள் பலரும் கலந்துகொண்டனர். இறுதியில் கல்லூரி செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் வடிவேலன் நன்றி கூறினார்.

    Next Story
    ×