என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
- ஜெயங்கொண்டம் வரதராஜன்பேட்டையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது
- ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி. சந்திரசேகர் தலைமையில் மாணவிகளின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் ஊழல் தடுப்பு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜெயங்கொண்டம் அருகே வரதராஜன்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களிடையே ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி. சந்திரசேகர் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.மேலும் கல்லூரி மாணவிகள் ஊழல் தடுப்பு பற்றி கேள்விகள் எழுப்பியபோது, அதற்கு டி.எஸ்.பி. சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் விளக்கம் அளித்தனர். சிறப்பாக திறமையாக கேள்வி கேட்ட மாணவிகளை டிஎஸ்பி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.இறுதியில் பள்ளி மாணவிகள் லஞ்சம், ஊழலுக்கு எதிராக உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் மதர் ஞானம்மா கல்லூரி முதல்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்