திருமானூர் அருகே கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்

திருமானூர் அருகே கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது முகாமில் 380 பசுக்களும், 560 வெள்ளாடுகளும், 180 கோழிகளும் பயன்பெற்றன.
திருமானூர் அருகே கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்
Published on

திருமானூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட கண்டிராதீர்த்தம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 முகாம் என்ற கணக்கில் மொத்தம் 120 முகாம்கள் நடைபெற உள்ளது. கண்டிராதீர்த்தம் கிராம ஊராட்சியில் நடைபெற்ற முகாமை கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் சொக்கலிங்கம் துவக்கி வைத்தார். முகாமானது ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா ராமமூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது. முகாமில் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதில் 380 பசுக்களும், 560 வெள்ளாடுகளும், 180 கோழிகளும் பயன்பெற்றன. மேலும் சிறப்பாக வளர்க்கப்படும் 10 கிடேரி கன்றுகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டம், அரசு திட்டங்களையும், வங்கிகள் மூலம் வழங்கப்படும் வேளாண் கடன் அட்டை ஆகியவற்றை பெற விண்ணப்பங்களும் வழங்கப்பட்டது. மேலும் கால்நடைகளுக்கு வரும் தொற்று நோய்கள் பற்றியும் அது வராமல் இருப்பதற்கான விளக்கங்களையும் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு மூலம் விளக்கப்பட்டது. குறிப்பாக கால்நடைகளுக்கு தற்போது பரவி வரும் தோல் கழலை நோயிற்கான தடுப்பூசி 380 மாடுகளுக்கு செலுத்தப்பட்டது. முகாமிற்கு கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் மருத்துவர் ஹமீதுஅலி மற்றும் உதவி இயக்குநர் மருத்துவர் ரிச்சர்ட் ராஜ் தலைமை வகித்தனர். இதில் கால்நடை உதவி மருத்துவர்கள் பிரபாகரன், மணிகண்டன், அருண் நேரு, கால்நடை ஆய்வாளர் செல்வராணி, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மாரிமுத்து, செல்வராஜ் மற்றும் நசீமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com