search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
    X

    அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

    • ஜெயலலிதா 75வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்றது
    • ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்

    திருமானூர்,

    திருமானூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மார்ச் 13 திருமானூரில் நடைபெற்றது.அரியலூர் மாவட்டம் திருமானூரில்முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவுப்படி, திருமானூர் கூட்ட அரங்கத்தில், அதிமுக சார்பில் நடைபெற்றது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்துக்கு, அதிமுக திருமானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் என். வடிவழகன் தலைமை வகித்தார். திருமானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் பளிங்காநத்தம் ஊராட்சி மன்ற தலைவருமான சி. சாமிநாதன் வரவேற்று பேசினார்.அதிமுக அரியலூர் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட அவைத் தலைவருமான ராமஜெயலிங்கம், தலைமை நிலைய பேச்சாளர்கள் நெத்தியடி நாகையன், மணிவாசகம் உள்ளிட்டோர் பேசினார்கள்.மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலர் அக்பர் ஷரீப்மாநில எம் ஜி ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் அறிவு என்கிற சிவசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர் தங்க பிச்சமுத்து, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஓட்டக்கோவில் சிவசங்கர், மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஓபி சங்கர், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஆண்டிமடம் ரீடு செல்வம், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் அரியலூர் செல்வராஜ், தா.பழூர் அசோகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நல்லமுத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் இலந்தைகூடம் வைத்திலிங்கம், அன்புச்செல்வி ஜெயபால், தூத்தூர் காமராஜ், திருமானூர் மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் சக்திவேல், கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் அன்பழகன், திருமானூர் ஒன்றிய குழு துனைத்தலைவர் அம்பிகா ராஜேந்திரன், கீழக்காவட்டாங்குறிச்சி சேட்டு என்கிற ராஜேந்திரன், தவமனி மற்றும் அதிமுகவின் திருமானூர் மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்இறுதியில் அதிமுக மாவட்ட பிரதிநிதி ராஜேஸ்வரி ஜம்புலிங்கம் நன்றி கூறினார்.

    Next Story
    ×