search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த்மீனா நேரில் ஆய்வு
    X

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த்மீனா நேரில் ஆய்வு

    • அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த்மீனா நேரில் ஆய்வு மேற்கொண்டார்
    • பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவை யான சான்றிதழ்களை தொடர்ந்து விரைவாக வழங்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவ லகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை பார்வையிட்டு, பணிகள் தொடர்பான பதிவேடுகள் மற்றும் பிற பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். பொதுமக்களுக்கான அத்தியாவசிய பணிகளில் அதிக முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றவும் சம்மந்தப்பட்ட அலுவல ர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், அரியலூர் வட்டாட்சியர் அலுவல கத்தினை பார்வையிட்டு, அலுவலகத்தில் பராமரிக்க ப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்தும், ஆன்லைன் பட்டா மாறுதல் மற்றும் பிற சேவைகள் உள்ளிட்ட அனைத்து பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவை யான சான்றிதழ்களை தொடர்ந்து விரைவாக வழங்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் மற்றும் அதன்மு ன்னேற்றம் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு, அரசின் திட்டங்கள் அனைத்து பொதும க்களையும் விரைவாக சென்று சேரும் வகையில் அலுவலர் கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

    Next Story
    ×