மேல்படிப்புக்காக நாளை லண்டன் செல்கிறார் அண்ணாமலை

சர்வதேச அரசியல் படிப்புக்காக லண்டன் செல்கிறார்.நவம்பர் மாத இறுதியில் படிப்பை முடித்து சென்னை திரும்புவார்.
மேல்படிப்புக்காக நாளை லண்டன் செல்கிறார் அண்ணாமலை
Published on

சென்னை:

லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சர்வதேச அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 பேரை தேர்வு செய்துள்ளது.

இதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப் பட்டுள்ள 12 பேரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் ஒருவர். அங்கு தங்கி படிப்பவர்களுக்கான செலவை பல்கலைக்கழகமே ஏற்றுக்கொண்டுள்ளது.

இதற்காக அண்ணாமலை நாளை (28-ந்தேதி) இரவு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்கிறார்.

3 மாதங்கள் லண்டனில் தங்கி படிக்கும் அண்ணாமலை வருகிற நவம்பர் மாத இறுதியில் படிப்பை முடித்து சென்னை திரும்புகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com