search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அணிக்கடவு வெள்ளை விநாயகர் கோவில் கும்பாபிேஷகம்   19-ந்தேதி நடக்கிறது
    X

    காேப்புபடம்

    அணிக்கடவு வெள்ளை விநாயகர் கோவில் கும்பாபிேஷகம் 19-ந்தேதி நடக்கிறது

    • முதற்கால யாக வேள்வி, திருமுறை விண்ணப்பம், பேரோளி வழிபாடு உட்பட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
    • காலை 8மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை அருகே அணிக்கடவில் வெள்ளை விநாயகர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவில் கருவறை, முன்மண்டபம், தளவரிசை, திருமதில் உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.பணிகள் நிறைவு பெற்று இன்று கும்பாபிேஷக விழா துவங்குகிறது.

    இன்று மாலை3 மணிக்கு, முளைப்பாலிகை, தீர்த்தம் எடுத்து வருதல், வெள்ளை விநாயகர் மூர்த்தி கோவிலுக்கு, அரச மரத்தில் இருந்து கொண்டு வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.மாலை 5:30 மணிக்கு மங்கள இசை, புனித நீர், புற்று மண் எடுத்தல், நிலத்தேவர் வழிபாடு, திருமகள், முளைப்பாலிகை இடுதல், காப்பு அணிவித்தல் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.மாலை 6:30 மணிக்கு திருக்குடங்கள் யாக சாலைக்கு எழுந்தருளச்செய்தல், முதற்கால யாக வேள்வி, திருமுறை விண்ணப்பம், பேரோளி வழிபாடு உட்பட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    நாளை 18-ந் தேதி காலை, 5:30 மணிக்குதிருப்பள்ளி எழுச்சி, காலை 7 மணிக்கு நினைவு திருமஞ்சனம், காலை, 9மணிக்குஇரண்டாம் கால யாக பூஜை, திருமறை தொடக்கம், பேரோளி வழிபாடு நடக்கிறது. 19-ந்தேதி, காலை, 4:30 மணிக்கு நான்காம் கால வேள்வி, காலை, 6:30 மணிக்கு திருக்குடங்கள் யாக சாலை, திருக்கோவில் வலம் வருதல், காலை 7 மணிக்கு வெள்ளை விநாயகர் கும்பாபிேஷகம் நடக்கிறது.காலை 8மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×