search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருசநாடு அருகே முன்விரோதத்தில் பைக்குக்கு தீ வைத்த முதியவர்
    X

    கோப்பு படம்.

    வருசநாடு அருகே முன்விரோதத்தில் பைக்குக்கு தீ வைத்த முதியவர்

    • சம்பத்தன்று தனது மோட்டார் சைக்கிளை தோட்டத்து வீட்டு அருகே நிறுத்தி விட்டு மாடு மேய்க்க சென்றார்
    • அப்போது மாயன் தீ வைத்து மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து நாசமானது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே மேலபூசனூத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மாயன் (வயது 70) என்பவ ருக்கும் முன்விரோதம் இருந்துவந்தது.

    சம்பத்தன்று தனது மோட்டார் சைக்கிளை தோட்டத்து வீட்டு அருகே நிறுத்தி விட்டு மாடு மேய்க்க சென்றார். அப்போது அங்கு வந்த மாயன் குணசேகரனின் மனைவியை திட்டி அங்கு இருந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து சென்று விட்டார்.

    இதில் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து நாசமானது. இது குறித்து வருசநாடு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×