தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலா்களும் தயராக இருக்க வேண்டும்

24 மணிநேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும்.கால்நடை சேதம் ஏற்படாதவாறு தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
கலெக்டர் தீபக்ஜேக்கப்.
கலெக்டர் தீபக்ஜேக்கப்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் தென்மேற்கு பருவமழை - 2023 குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பேசி யதாவது பேசியதாவது:-

தென்மேற்கு பருவமழையையொட்டி, மாவட்ட கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும்.

அனைத்து தகவல் தொடா்பு சாதனங்களுடன் சுழற்சி முறையில் பணியாளா்களை நியமித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளைக் கண்காணிக்க வேண்டும்.

கலெக்டர் அலுவலகத்தில் கட்ட ணமில்லா தொலைபேசி அமைக்க வேண்டும். வருவாய்த் துறையினா் தலைமையில் மண்டல அளவிலான குழுக்களை நியமிக்க வேண்டும்.

ஒவ்வொரு குழுவும் 5 அல்லது 7 பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்காணிக்க வேண்டும்.ன

அனைத்து துறை அலுவலா்களும் பேரிடா் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை எல்லா வகையிலும் சமாளிப்பதற்கும், நிவாரண பணிகளில் எந்தவித தொய்வும் ஏற்படாத வகையிலும், உயிா்சேதம், கால்நடை சேதம் ஆகியவை ஏற்படாதவாறு தேவையான தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

தென்மேற்கு பருவமழையை எதிா்கொள்ள அனைத்து துறை அலுவலா்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளா்ச்சி) , ஆணையர் சரவணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com