search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏ.ஐ.ஓ.பி.சி. சங்கம் சார்பில் நாளை பெரம்பூரில் ரெயில்வே தொழிலாளர்கள் மாநாடு
    X

    ஏ.ஐ.ஓ.பி.சி. சங்கம் சார்பில் நாளை பெரம்பூரில் ரெயில்வே தொழிலாளர்கள் மாநாடு

    • பெரம்பூரில் உள்ள பணிமனை கோட்டை வளாகத்தில் முதல் மாநாடு நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.
    • பல்வேறு பிரச்சினைகளை குறித்து கலந்தாய்வு செய்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

    பெரம்பூர்:

    அனைத்திந்திய இதர பிற்படுத்தப்பட்ட ரெயில்வே தொழிலாளர்கள் நல சங்கத்தின் ஏ.ஐ.ஓ.பி. சி.ஆர்.இ.ஏ. சார்பில் தென்மண்டல பொது செயலாளர் டாக்டர் ஆர். அப்சல், தலைமையில் பெரம்பூரில் உள்ள பணிமனை கோட்டை வளாகத்தில் முதல் மாநாடு நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. மாநாட்டில் இந்திய ரெயில்வே துறையில் தனியார் மயம் அதிகரிப்பால் இட ஒதுக்கீட்டில் ஏற்படும் பாதிப்புகள், ஓபிசி தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் ரெயில்வே துறையில் ஓ.பி.சி. தொழிலாளர்களுக்கு ரெயில்வே போர்டு வழங்கி உள்ள சலுகைகள் மற்றும் உரிமைகள் சரியாக நடை முறைப்படுத்தப்படுகிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை குறித்து கலந்தாய்வு செய்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

    மாநாட்டுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பா. ம. க. தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், பா. ம. க. துணை பொதுச் செயலாளரும் , முன்னாள் ரெயில்வே துறை இணை அமைச்சருமான ஏ. கே. மூர்த்தி, மூத்த வழக்கறிஞரும் அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவருமான எஸ். பிரபாகரன், ஏ.ஐ.ஓ.பி. சி தென்மண்டல தலைவர் சுல்தான், நிர்வாக தலைவர் பி. வினோத், ஆர். செந்தில் குமார், தென்மண்டல பொருளாளர் ஏ. சீனிவாச ராவ், துணை பொது செயலாளர் கே. விஜயகுமார், சென்னை கோட்ட செயலாளர் பி. திரு குமரன், பணிமனை கோட்ட செயலாளர் ஆர். ஏழுமலை, கூடுதல் கோட்ட செயலாளர் நாசர்கான், கோட்ட தலைவர் ஏ. ஹென்றி, கூடுதல் கோட்ட தலைவர் ஆர். தயாநிதி ரிச்சர்ட், பணிமனை கோட்ட பொருளாளர் ஆர். செந்தில்குமார், பணிமனை கோட்ட நிர்வாக தலைவர் ஆர். ராம்ஸ்வரூப், பணிமனை கோட்ட நிர்வாக தலைவர் யூ. ராகவேந்திரா, பணிமனை கோட்ட அமைப்பு செயலாளர் சி. மோகன், ஓ பி சி துணை பொது செயலாளர் உ. அனந்த ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள். மேலும் தென் மண்டல நிர்வாகிகளும், சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம், ஆகிய கோட்ட நிர்வாகிகள், பணிமனை கோட்ட நிர்வாகிகள், அனைத்து கிளை நிர்வாகிகள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெயில்வே தொழிலாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

    Next Story
    ×