search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கயத்தாறு அருகே தோட்டங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு
    X

    ஆய்வு நடைபெற்றபோது எடுத்தபடம்.

    கயத்தாறு அருகே தோட்டங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

    • மக்காச்சோள தோட்டங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • பயிர்களை பாதுகாப்பது குறித்த தொழில் நுட்ப ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள வானரமுட்டியில் தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் ஆகியோர் மக்காச்சோளம் பயிரிடப்பட்ட விவசாயிகளின் தோட்டங்களில் ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின் போது மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் வராமல் தடுப்பதற்கு, விதைப்பதற்கு முன் கோடை உழவு செய்தல், ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுதல் ,தையோமீத்தாக்கம் 4 மில்லி மருந்தை ஒரு கிலோ விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்தல், சரியான இடைவெளியில் விதைத்தல், வரப்பு பயிராக நாற்றுச் சோளம் பயிரிடுதல் மூலமாகவும் விதைத்தவுடன் இனக்கவர்ச்சிப் பொறி வைத்தல், 15 முதல் 20 நாட்கள் வயதுடைய பயிர்களுக்கு புழு பெண்டியாமைட் 5 மில்லி, 35 முதல் 40 நாட்கள் வயதுடைய பயிர்களுக்கு மெட்டாரைசியம், அனிசோப்பிலே 80கிராம், 40 முதல் 60 நாட்கள் வயதுடைய பயிர்களுக்கு மெக்டின்பென்சோயட் 4 கிராம்,60 நாட்களுக்கு மேல் வயது உடைய பயிர்களுக்கு நவலூரான் 10 மில்லி அல்லது ஸ்பிலோ டோராம் 5 மில்லி மருந்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து படைப்புழு தாக்குதலில் இருந்து மக்காச்சோள பயிர்களை பாதுகாப்பது உள்ளிட்ட தொழில் நுட்ப ஆலோசனைகளை விவசாயிகளுக்கு விளக்கி கூறினர்.

    Next Story
    ×