search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டம் உதயத்திற்கு பின்பு முதல் முறையாக குற்றாலத்தில்  நாளை சாரல்  திருவிழா  தொடக்கம்
    X

    சாரல் திருவிழா நடைபெறும் கலைவாணர் அரங்கில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.


    தென்காசி மாவட்டம் உதயத்திற்கு பின்பு முதல் முறையாக குற்றாலத்தில் நாளை சாரல் திருவிழா தொடக்கம்

    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சாரல் திருவிழா நடத்தப்படவில்லை.
    • 3-ம் நாளான 7-ந் தேதி பளுதூக்குதல், வலு தூக்குதல், ஆணழகன் போட்டி, யோகா போட்டிகளும், 8-ந் தேதி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள், படகு போட்டிகளும் நடத்தப்படுகிறது.

    தென்காசி:

    குற்றாலம் சீசனை யொட்டி ஒவ்வொரு ஆண்டும் சாரல் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவிழா நடத்தப்படவில்லை.

    பொதிகை திருவிழா

    கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் தென்காசி தனி மாவட்டமாக உரு வானது. அதன்பிறகு முதல் முறையாக தற்போது சாரல் திருவிழா நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டு சாரல் திருவிழா பொதிகை திருவிழாவாக நடத்தப்படுகிறது. நாளை 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை விழா நடக்கிறது.

    விழாவை முன்னிட்டு புத்தக திருவிழா 14-ந் தேதி வரை நடக்கிறது. குற்றாலம் கலைவாணர் அரங்கில் நாளை மாலை தொடங்கும் விழாவை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

    பல்வேறு போட்டிகள்

    தொடர்ந்து விழா நடைபெறும் ஒவ்வொரு நாட்களும் பல்வேறு போட்டிகள் நடத்தப் படுகிறது. 2-ம் நாளான 6-ந் தேதி கொழு கொழு குழந்தைகள் போட்டிகளும், நாய்கள் கண்காட்சியும் நடத்தப்படுகிறது.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் பரிசு வழங்குகிறார்.


    3-ம் நாளான 7-ந் தேதி பளுதூக்குதல், வலு தூக்குதல், ஆணழகன் போட்டி, யோகா போட்டிகளும், 8-ந் தேதி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள், படகு போட்டிகளும் நடத்தப்படுகிறது.

    9-ந் தேதி மாரத்தான், வில்வித்தை போட்டிகளும், 10-ந் தேதி கோலப் போட்டி, யோகா போட்டிகளும் நடத்தப்படுகிறது.

    11-ந் தேதி மகளிருக்கான மினி மாரத்தான், மேஜிக் விளக்கு அலங்கார போட்டி நடக்கிறது.

    நிறைவு நாளான 12-ந் தேதி பழைய கார்களின் அணிவகுப்புகளும், கல்லூரி மாணவ- மாணவிகளின் பரத நாட்டியம் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.

    குற்றாலம் சுற்றுச்சூழல் பூங்காவில் நாளை மறுநாள் (சனிக்கிழமை)முதல் 8-ந் தேதி வரை நடைபெறும் தோட்டக்கலை திருவிழாவில் வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சி, மண்ணில்லா விவசாய மாதிரி அமைப்பு, செங்குத்து தோட்டம் மாதிரி அமைப்பு, தோட்டக்கலை விளை பொருட்கள் கண்காட்சி, மலர்களால் உருவாக்கப்பட்ட மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

    தொடர்ந்து ஜமீன் பங்களா வளாகத்தில் நடைபெறும் உணவு திருவிழாவில் தென்காசி, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த உணவு தயாரிப்பு நிறுவனங்களின் ஸ்டால்கள் இடம் பெறுகிறது.

    ஏற்பாடுகள் தீவிரம்

    நெல்லையின் பிரசித்தி பெற்ற அல்வா முதல் அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நாளை சாரல் திருவிழா தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிர மாக நடைபெற்று வருகிறது. கலைவாணர் அரங்கில் பல்வேறு அரங்கு அமைக்கும் பணி தீவிரப்படுத் தப்பட்டு ள்ளது. அதனை மாவட்ட கலெக்டர் ஆகாஷ், போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    விழாவையொட்டி கலைவாணர் அரங்கு வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. அங்கு பார்வையாளர்கள் அமர் வதற்காக இருக்கைகளும் போடப்பட்டு வருகிறது.சாரல் விழாவை யொட்டி குற்றாலம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    Next Story
    ×