search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதித்யா எல்.1 பயணம் : கொடைக்கானலில் உற்சாகமாக கொண்டாடிய மாணவர்கள்
    X

    தேசிய கொடியுடன் உற்சாகமாக கொண்டாடிய மாணவ-மாணவிகள்.

    ஆதித்யா எல்.1 பயணம் : கொடைக்கானலில் உற்சாகமாக கொண்டாடிய மாணவர்கள்

    • சூரியனைப் பற்றி ஆய்வு செய்வதற்காக முதல்முறையாக இந்தியாவில் இருந்து ஆதித்யா எல்.-1 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது .
    • வெற்றிகரமாக விண்ணில் ஆதித்யா எல்-1 செலுத்தப்பட்டதை தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் தேசிய கொடியை அசைத்தும், கேக் வெட்டியும் உற்சாகமாக கொண்டாடினர்.

    கொடைக்கானல்:

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு உலகில் முதல் நாடாக நிலவில் உள்ள தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் அனுப்பப்பட்டு வெற்றிகரமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து சூரியனைப் பற்றி ஆய்வு செய்வதற்காக முதல்முறையாக இந்தியாவில் இருந்து ஆதித்யா எல்.-1 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது .

    அதாவது பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் நிலைநிறுத்தப்படும் இந்த செயற்கைக்கோள் சூரியனில் இருந்து வெளிவரக்கூடிய கதிர்கள் மற்றும் சூரியனின் வெளிப்புற கரோனா குறித்தும் சூரியனில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் இடைவெளி இன்றி தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு அங்கிருந்து பூமிக்கு செயற்கைக்கோளின் பதிவு செய்யக்கூடிய படங்கள் அதிவேகமாக அனுப்பி வைக்கப்படும்.

    அந்த படங்கள் மூலம் பல கேள்விகளுக்கு பதில்கள் மற்றும் ஆராய்ச்சிகள் தொடரப்படும். பிரபஞ்சம் தோன்றியது எப்படி உள்ளிட்ட பல்வேறு அரிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக இருக்கும். நொடிக்கு 4 புகைப்படங்கள் வரை பூமிக்கு செயற்கைக்கோளிலிருந்து அனுப்பி வைக்கப்படும். ஆதித்யா செயற்கைக்கோளிலிருந்து வரக்கூடிய படங்கள் மற்றும் தகவல்களை வைத்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    விண்ணில் செலுத்தப்பட்ட விண்கலம் குறித்து கொடைக்கானல் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அப்சர்வேட்டரி வான் இயற்பியல் ஆய்வு மையத்தில் காணொளி மூலம் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சூரியனில் நிகழும் நிகழ்வு குறித்து மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. வெற்றிகரமாக விண்ணில் ஆதித்யா எல்-1 செலுத்தப்பட்டதை தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் தேசிய கொடியை அசைத்தும், கேக் வெட்டியும் உற்சாகமாக கொண்டாடினர்.

    Next Story
    ×