search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்களில் அபிஷேக ஆராதனை
    X

    கோவில்களில் அபிஷேக ஆராதனை

    • ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு கோவில்களில் அபிஷேக ஆராதனை
    • சிறப்பு அலங்காரத்தில் மாரி யம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் சேமங்கி மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு மாரியம்மனுக்கு

    பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மாரி யம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதில் சுற்று வட்டா ர பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொ ண்டு மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரி சனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ப்பட்டது. அதேபோல் உப்பு பாளையத்தில் உள்ள வீர மாத்தி அம்மன் கோவில், புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், நன்செய் புகழூர் பாகவல்லி அம்பிகை கோவில், நொய்யலில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில், புன்னம் மாரியம்மன், பேரூர் அம்மன் கோவில், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை கோவில், மாரி யம்மன் கோவில், நன்செய் புகழூர் பத்ரகாளி கண்டியம்மன் கோவில், அத்திப்பாளையம் பொன்னாச்சிஅம்மன், , உப்பு பாளையம் மாரியம்மன், புன்னம் மாரியம்மன், பகவதி அம்மன், பேரூர்அம்மன், தவுட்டுப்பாளையம் மாரியம்மன், பகவதி அம்மன், , குந்தாணி பாளையம் நத்தமேடு அங்காள பரமேஸ்வரி அம்மன், மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், குடிப்பாட்டு மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்

    Next Story
    ×