என் மலர்
உள்ளூர் செய்திகள்

குன்னூர் பகுதியில் உலா வந்த மரநாய்
- அவ்வப்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைபாதையில் தென்படுவது வழக்கம்.
- மக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் மரநாய் வனபகுதிக்குள் சென்று மறைந்தது
அருவங்காடு,
குன்னூர் பகுதியில் சிறுத்தை, யானை, கரடி, கடமான், மரநாய், குரங்குகள் என அரியவகை விலங்குகள் அதிகமாக உள்ளன. இவை அவ்வப்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைபாதையில் தென்படுவது வழக்கம்.
இந்த நிலையில் குன்னூர் தீயணைப்பு அலுவலக பகுதியில் உள்ள ஒரு மரத்தில் மரநாய் தென்பட்டது. இதனை உள்ளூர்வாசிகளும், சுற்றுலா பயணிகளும் போட்டி போட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்தனர். மக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் மரநாய் வனபகுதிக்குள் சென்று மறைந்தது
Next Story






