search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னமனூரில் கன மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
    X

    வீடு இடிந்ததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்.

    சின்னமனூரில் கன மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது

    • சின்னமனூரில் பகுதியில் ஒரு வாரமாக பெய்துவரும் அடைமழை காரணமாக இரவு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
    • மின்வாரிய அதிகாரிகளுக்கும், வருவாய் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் 23-வது வார்டு ஊர்க்காவல் தெருவில் வசித்து வரும் முத்தீஸ்வரன் (வயது 40). இவரது மனைவி ஈஸ்வரி (35) இவர்களது வீடு கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் அடைமழை காரணமாக பழுதடைந்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு அந்த சுவர் இடிந்து விழுந்தது.

    அப்போது முத்தீஸ்வரன் குடும்பத்தினர் மற்றொரு அறையில் இருந்ததால் அசம்பாவிதம் தவிர்க்க ப்பட்டது. உடனடியாக இது குறித்து அப்பகுதி வார்டு உறுப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு 23 வது வார்டு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, சின்னமனூர் நகர்மன்ற தலைவர் அய்யம்மாள்ராமு, துணைத் தலைவர் முத்து க்குமார் ஆகியோர் வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி மாற்று ஏற்பாடுகள் செய்தனர்.

    பின்பு மின்வாரிய அதிகாரிகளுக்கும், வருவாய் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    Next Story
    ×