அசோகபுரம் ஊராட்சியில் குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு சுவாசிக்க முடியாமல் மூச்சுத் தினறல் ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அசோகபுரம் ஊராட்சியில் குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து
Published on

கவுண்டம்பாளையம்,

கோவை துடியலூரை அடுத்து உள்ள அசோகபுரம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள ெரயில்வே பாலம் அருகில் கொட்டப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக இங்கு குப்பைகள் மலை போல் குவிந்துள்ளன. இங்கு அடிக்கடி மர்ம நபர்கள் குப்பைகளுக்கு தீ வைத்து விடுவதால் தீ விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு இங்குள்ள குப்பைகளில் இருந்து புகை வந்துள்ளது. தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டது.இதன் காரணமாக அருகில் உள்ள குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு சுவாசிக்க முடியாமல் மூச்சுத் தினறல் ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து கவுண்டம்பாளையத்தில் உள்ள கோவை வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com