search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சி அருகே பிளஸ்-1 மாணவியை தாக்கிய வாலிபர்
    X

    பொள்ளாச்சி அருகே பிளஸ்-1 மாணவியை தாக்கிய வாலிபர்

    • மோட்டார் சைக்கிளில் ஏற மறுத்ததால் காதலர் ஆத்திரம்
    • பொள்ளாச்சி தாலுகா போலீசார் தீவிர விசாரணை

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ராமநாதபுரத்தை சேர்ந்தவர் 15 வயது பள்ளி மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவரது தாய் மற்றும் தந்தை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் மாணவி அவரது தாத்தா பாட்டி பராமரிப்பில் இருந்து வருகிறார்.

    இந்தநிலையில் மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெகதீஸ் (வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

    சம்பவத்தன்று மாணவி பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஜெகதீஸ் தன்னுடன் மோட்டார் சைக்கிளில் வருமாறு அழைத்தார். ஆனால் மாணவி வர மறுத்து விட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் மாணவியை தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார். இதில் காயம் அடைந்த மாணவி நடந்த சம்பவத்தை தனது தாத்தாவிடம் கூறி னார். அவர் மாணவியை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசில் மாணவி புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×