search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுந்தரபாண்டியபுரம் அருகே மின்கம்பங்களை அகற்றாமலேயே அமைக்கப்பட்ட புதிய தார் சாலை
    X

    சுந்தரபாண்டியபுரம் அருகே மின்கம்பங்களை அகற்றாமலேயே அமைக்கப்பட்ட புதிய தார் சாலை

    • சுந்தரபாண்டியபுரத்தில் இருந்து சுரண்டை செல்லும் தார் சாலையானது குண்டும் குழியுமாக காட்சியளித்தது.
    • சாலை ஓரத்தில் நின்ற மின்கம்பங்களை அகற்றாமலேயே சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் இருந்து சுரண்டை செல்லும் தார் சாலையானது குண்டும் குழியுமாக காட்சியளித்ததால் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.மேலும் தார் சாலையானது சற்று அகலப்படுத்தப்பட்ட நிலையில் சாலை ஓரத்தில் நின்ற மின்கம்பங்களை அகற்றாமலேயே தற்பொழுது புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மின்கம்பத்தை சாலையோரம் மறு நடவு செய்ய வேண்டும் எனவும், மின்கம்பங்களில் உரசும் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×