search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகராஷ்டிராவில் சிறை பிடிக்கப்பட்ட சங்ககிரியை சேர்ந்த லாரி மீட்கப்பட்டது
    X

    சங்க நிர்வாகியை பாராட்டிய காட்சி.

    மகராஷ்டிராவில் சிறை பிடிக்கப்பட்ட சங்ககிரியை சேர்ந்த லாரி மீட்கப்பட்டது

    • விவசாயிகள் தங்களுக்கு வெங்காயம் லோடு தரகர் மூலமாக வரவேண்டிய நிலுவை தொகை பாக்கி உள்ளதாக 20 நாட்களுக்கு மேலாக சிறைபிடித்து வைத்திருந்தனர்.
    • அவரது கடின முயற்சியின்பேரில் லாரி மீட்கப்பட்டது.

    திருச்செங்கோடு:

    மகாராஸ்திர மாநிலம் அவ்ரங்காபாத்தில் கடந்த ஜூலை 30-ந்தேதி வெங்காயம் லோடு ஏற்ற சென்ற சங்ககிரியை சேர்ந்த லாரியை அங்குள்ள விவசாயிகள் தங்களுக்கு வெங்காயம் லோடு தரகர் மூலமாக வரவேண்டிய நிலுவை தொகை பாக்கி உள்ளதாக 20 நாட்களுக்கு மேலாக சிறைபிடித்து வைத்திருந்தனர்.

    இதுபற்றி லாரி உரிமையாளர் திருச்செங்கோடு லாரி உரிமையாளர் சங்கத்தின் துணை தலைவர் சி.ஆர்.சங்கரிடம் தெரிவித்தார். அவரது கடின முயற்சியின்பேரில் லாரி மீட்கப்பட்டது.

    இதையடுத்து லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி புக்கிங் ஏஜெண்ட்டுகள் திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்திற்கு வந்து தலைவர் மூர்த்தி, செயலாளர் மோகன்ராஜ் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் துணை தலைவர் சி.ஆர்.சங்கருக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×