கோவையில் நாட்டு வைத்தியர் மண்ணுளி பாம்பை கொண்டு மருந்து தயாரிப்பு

நாட்டு மருந்து கடைக்காரரும், வைத்தியருமான சின்ன தம்பிராஜை வனத்துறை சட்டப்பிரிவுகளின்கீழ் போலீசார் கைது செய்தனர் பாம்பினை கொண்டு புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்க வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
கோவையில் நாட்டு வைத்தியர் மண்ணுளி பாம்பை கொண்டு மருந்து தயாரிப்பு
Published on

கோவை,

கோவை மருதமலை அடுத்த கோவில்மேடு பகுதியில் ஒருவர் புலித்ேதாலை பதுக்கி வைத்து இருப்பதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே போலீசார் அந்த பகுதியில் விசாரணை நடத்தினார்கள்.

இதன் ஒரு பகுதியாக நாட்டு மருந்துக்கடை வியாபாரியும், வைத்தியருமான சின்னதம்பிராஜ் (வயது 52) என்பவரின் கடையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் அங்கு ஒரு புலித்தோல் சிக்கியது. வனத்துறை அதிகாரிகள் வைத்தியர் வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் அங்கு 3 மண்ணுளி பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றில் ஒன்று ஏற்கெனவே செத்து அழுகிய நிலையில் இருந்தது. மண்ணுளி பாம்புடன் மான் கொம்பு ஒன்றும் சிக்கியது.இதனை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் நாட்டு மருந்து வைத்தியர் சின்னதம்பிராஜிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.

அவர் போலீசாரிடம் கூறுகையில் எனது தந்தை சின்னச்சாமி நாட்டு மருந்து கடை வைத்து இருந்தார். அவருக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்தும் மருத்துவ முறைகள் அத்துப்படி. இதன்மூலம் அவர் மருந்து தயாரித்து பலரின் நோய்களை குணப்படுத்தி உள்ளார்.

இந்த மருந்துகள் தயாரிக்கும் முறையை அவர் எனக்கும் கற்று கொடுத்தார். அதன்படி நான் புற்றுநோய்க்கு மருந்து தயாரிப்பது என்று முடிவு செய்தேன். இதற்காக மண்ணுளி பாம்பு, மான்கொம்பு உள்ளிட்டவைகளை பயன்படுத்தி வந்தேன் என்றார். இதனை தொடர்ந்து நாட்டு மருந்து கடைக்காரரும், வைத்தியருமான சின்ன தம்பிராஜை வனத்துறை சட்டப்பிரிவுகளின்கீழ் போலீசார் கைது செய்தனர். சின்ன தம்பிராஜிடம் பறிமுதல் செய்யப்ப ட்டது உண்மையிலேயே புலித்தோல் தானா? என்று தெரியவில்லை. இது சென்னைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com