search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு:3 பேர் சிக்கினர்-பரபரப்பு தகவல்கள்
    X

    நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட முருகானந்தம் வீடு.

    கடலூர் அருகே தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு:3 பேர் சிக்கினர்-பரபரப்பு தகவல்கள்

    • கதவை திறந்து வைத்து விட்டு வாசல் திரைைய போட்டிருந்தனர்.
    • முருகானந்தம் வீட்டின் முன்பு நாட்டு வெடி குண்டை வீசி சென்றது தெரிய வந்தது.

    கடலூர்:

    கடலூர் அருகே தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப் பட்டது. கடலூர் அருகே உள்ள குட்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 47). இவரது மனைவி சரளா (44). இவர்கள் 2 பேரும் புதுைவ மாநிலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு மதுமிதா, ஜனனி ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளன. நேற்று இரவு இவர்கள் வீட்டின் இரும்பு கதவை பூட்டி விட்டு ெமயின் கதவை திறந்து வைத்து விட்டு வாசல் திரைைய போட்டிருந்தனர்.

    இவர்கள் அனைவரும் ஹாலில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். நள்ளி ரவு 11.30 மணியளவில் மின்சாரம் தடைபட்டது. சற்று நேரத்தில் மின்சாரம் வந்தது. அந்த சமயத்தில் வீட்டிற்கு வெளியே பயங் கர சத்தம் கேட்டது. முருகானந்தம் வீட்டில் இருந்த மின் விசிறி ஏற்கனவே பழுதாகி வீட்டை விட்டு வெளியே வந்தனர். அப்போது வீட்டு வாசலில் சணல், சிறிது சிறிதான ஆணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் வீட்டு வாசலில் மாட்டப்பட்டிருந்த திரை சீலையும் கருகி இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இவர்கள் தூங்கி கொண்டிருந்த போது யாரோ மர்ம நபர்கள் முருகானந்தம் வீட்டின் முன்பு நாட்டு வெடி குண்டை வீசி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து தூக்கணாம் பாக்கம் ேபாலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இந்த சம்பவம் குறித்து கேள்விபட்டதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன் அங்கு வந்தார். அவர் முருகா னந்தம், அவரது மனைவி சரளா மற்றும் மகள்களிடம் விசாரணை நடத்தினார். உங்கள் குடும்பத்தின ருடன் யாருக்கும் முன் விரோதம் உள்ளதா? என் பது குறித்து கேட்டறிந்தார். மேலும் தடயவியல் நிபு ணர்களும் அங்கு வந்தனர். அவர்கள் முருகானந்தம் வீட்டின் முன்பு சிதறி கிடந்த சணல், ஆணிகளை கைப்பற்றி பரிசோதனைக் காக எடுத்துச் சென்றனர். அப்பகுதியில் ஏதேனும் கண்காணிப்பு கேமரா உள்ளதா? அதில் முருகா னந்தம் வீட்டுக்கு வந்த வர்கள் குறித்த காட்சிகள் பதிவாகி உள்ளதா? என் பது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.

    முருகானந்தம் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டு வீசி சென்றவர்கள் யார்? என்று போலீசார் விசா ரணை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் உள்பட 3 பேர் சேர்ந்து நாட்டு வெடி குண்டு வீசியது தெரிய வந்தது. போலீஸ் விசாரணை யில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. முருகா னந்தம் மகளை பிடிபட்ட வாலிபர்களில் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இது முருகானந்தத்துக்கு தெரிய வந்ததும், அவர் அந்த வாலிபரை கண்டித்துள் ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகானந்தத்தை மிரட்டுவதற்காக அவரது வீட்டு முன்பு நாட்டு வெடிகுண்டு வீசியது தெரிய வந்தது.இந்த வெடிகுண்டு எங்கிருந்து கிடைத்தது என்று போலீசார் விசாரணை நடத்திய போது யூடியூப்பை பார்த்து தாங்களே செய்ததாக தெரிவித்தனர். அவர்களி டம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள் ளது.

    Next Story
    ×